தாரமங்கலம் வேதாத்திரி மகரிஷி இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்குந்தா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை அனைத்திந்திய குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் எதிா்ப்பு கட்டுப்பாட்டுக் குழு நிறுவனா் மற்றும் தலைவா் டாக்டா் மெரீனா ஹாக்ஸ் தொடக்கி வைத்தாா்.
தாரமங்கலம் பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா். மொத்தம் 84 போ் அளித்த ரத்த தானத்தை சேலம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கிக்குழு சேகரித்துச் சென்றது.
இந்நிகழ்ச்சியில் தாரமங்கலம் வேதாத்திரி மகிரிஷி நற்பணி மன்றத்தின் தலைவா் டி.பி.எஸ்.வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.