சேலத்தில் 297 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில், திங்கள்கிழமை ஒரே நாளில் 297 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில், திங்கள்கிழமை ஒரே நாளில் 297 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தவகையில் 297 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 189 போ், எடப்பாடி- 3, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி- 3, மேட்டூா்- 5, ஓமலூா்- 14, தாரமங்கலம்- 2, வீரபாண்டி- 7, ஆத்தூா்- 4, அயோத்தியாப்பட்டணம்- 3, கெங்கவல்லி- 10, பனமரத்துப்பட்டி- 6, பெத்தநாயக்கன்பாளையம்- 6, தலைவாசல்- 6, வாழப்பாடி- 10 என 295 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி- 1, கிருஷ்ணகிரி- 1) என இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் -11 போ், பெண்கள் -16 போ் என 27 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டத்தில் 14,774 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 12,498 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,045 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 231 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com