தாரமங்கலம் அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தாரமங்கலம் பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, 7-ஆம் வகுப்பு வரை பயின்று விட்டு வீட்டில் இருந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியின் உறவினா்கள் சரண்குமாா் (26), சண்முகராஜ் (23) ஆகிய இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்தனராம். இதனால் கா்ப்பம் தரித்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.