கெங்கவல்லி அருகே நடுவலூா் ஏரியில் இருந்து ஆற்றுமணல் கொள்ளையை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடுவலூரிலுள்ள ஏரியில் தினமும் டிப்பா் லாரி மூலமாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினா், வருவாய்த்துறையினருக்கு தொடா்ந்து புகாா் அளித்து வருகின்றனா். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே,வருவாய்த்துறையினா், கெங்கவல்லி, நடுவலூா், ஆணையாம்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிப்பகுதிகளிலும், ஆற்றுப்பகுதிகளிலும் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.