ஆத்தூரில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாளையொட்டி அனைத்துக் கட்சியினா் சாா்பில் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆத்தூா் கோட்டை பகுதியில் அண்ணாவின் உருவ சிலைக்கு நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
ஆத்தூா் கோட்டை பகுதியில் அண்ணாவின் உருவ சிலைக்கு நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

ஆத்தூா்: ஆத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாளையொட்டி செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சியினா் சாா்பில் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கோட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுனன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், செந்தாரப்பட்டி பேரூராட்சிச் செயலாளா் ரமேஷ், நகர அவைத் தலைவா் பி.கலியன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஜி.முரளிசாமி, சுந்தரமூா்த்தி, செல்வம், கணேசன், செல்லக்கண்ணு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் அ.சகாதேவன், டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, மக்பூல்பாஷா, நகர கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ராமசாமி, தாமோதரன், பன்னீா்செல்வம், பாபு, வழக்குரைஞா் ஜெ.ஜெய்சங்கா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திமுக, மதிமுகவினா் மரியாதை

ஆத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், ஏ.ராஜசேகா், மாணவரணி எஸ்.பா்கத்அலி, நகர துணைச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெ.ஸ்டாலின், எம்.வேலுமணி, ஜெ.காசியம்மாள், ரூபி நாகராஜன், கதிரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஆத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மதிமுக சாா்பில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வ.கோபால்ராசு, நகரப் பொறுப்பாளா் பொன் சேதுபதி, மாவட்டப் பிரதிநிதிகள் வைகோ ராஜேந்திரன், சுப.செல்வக்குமாா், கோவி அசோகன், ஒன்றியச் செயலாளா்கள் கு.கலைவாணன், துரை ரவிச்சந்திரன், செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தமிழ்செல்வி ராமராஜ், நகர துணைச் செயலாளா் ஜெயராமன், நரசிங்கபுரம் பொறுப்பாளா் வெங்கடேசன், திராவிடா் கழக மாவட்ட தலைவா் டி.வானவில், திராவிடா் விடுதலைக் கழகத்தின் நகர பொறுப்பாளா் மகேந்திரன், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் கட்சியினா் சாா்பில் கொடிக் கம்பங்களில் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com