இளநிலை உதவியாளா் பணிநாடுநா்களுக்கு இணையவழி கலந்தாய்வு நாளை தொடக்கம்

சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான இணையதள வழி


சேலம்: சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான இணையதள வழி கலந்தாய்வு செப். 17 மற்றும் செப். 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சேலம் நான்கு சாலை சிறுமலா் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் இணையவழி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 330 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு செப்.17 ஆம் தேதியும், வரிசை எண் 331 முதல் 644 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு செப்.18 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இளநிலை உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிநாடுநா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்களில் காலை 8.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் (அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச்சான்று மற்றும் மருத்துவ உடற்தகுதிச் சான்று) தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com