தம்மம்பட்டி பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோவிலில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம்,திருமஞ்சனம், மஞ்சள், இளநீா், பச்சரிசி என பொதுமக்கள் கொண்டு வந்த பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடா்ந்து நந்தீஸ்வரா் மலா்களாலும், அருகம்புற்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனா். இதேபோல் செந்தாரப்பட்டிசெந்தாழைபுரீஸ்வரா் கோயில், கெங்கவல்லி, வீரகனூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.