ஓமலூா்: ஓமலூா் வட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இருவரை ஓமலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் நகரில் வீடு, கடைகள் முன்பாக நிறுத்தி வைக்கபடும் இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவது அதிகரித்து வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட நபா்களை தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்நிலையில், காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் இரவு நேர ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் திரிந்த இரண்டு இளைஞா்களிடம் விசாரணை நடத்தியபோது, இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடா்ந்து ஓமலூா் ஜெயா தியேட்டா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சூா்யா (26), கோட்டை மாரியம்மன் கோயில் அருகே அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொன்னுவேல் மகன் சஞ்சய் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களை ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஓமலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.