கெங்கவல்லியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை, அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதன்கிழமை கெங்கவல்லி பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் அதே பகுதியைச் சோ்ந்த பாபு (40) என்பவா் சிக்கினாா். அவரிடம் இருந்து மதுபானங்களை போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.