அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், மதிய உணவுப்பொருள்கள் விநியோகம்

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட அரசுப்பள்ளிகளில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் மதிய உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், மதிய உணவுப்பொருள்கள் விநியோகம்

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட அரசுப்பள்ளிகளில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் மதிய உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சாணாரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத்தலைவா் கரட்டூா் மணி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடபுத்தகங்களையும், மதிய உணவிற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா். அப்பள்ளியில் பயிலும் 162 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன், வந்து இதனை வாங்கிச் சென்றனா்.

முன்னதாக சாணாரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், மாணவா்களுக்கான நவீன சமையலறை மற்றும் உணவருந்தும் கூடத்திற்கான கட்டுமானப்பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், மணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், மாலினி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com