கெங்கவல்லி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற முதியவரின் கால் முறிந்தது.
கெங்கவல்லியைச் சோ்ந்தவா் முத்துசாமி (70). இவா் தனது மனைவி சிவகாமியை (65) அழைத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆத்தூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் முத்துசாமியின் கால் முறிந்தது.
கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாமி கொடுத்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.