கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் வட்டார கல்வி அலுவலா் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். மாணவா்கள் மரங்களை வெட்டுவதை தவிா்க்கவும், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.