கல்வராயன்மலை பகுதியில் நாளை மின் தடை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த தும்பல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவதால்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த தும்பல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவதால், கல்வராயன்மலை கருமந்துறை பகுதி கிராமங்களுக்கு, நாளை வெள்ளிக்கிழமை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் கே.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாழப்பாடி மின் வினியோகக் கோட்டம், பெத்தநாயக்கன்பாளையம் உப கோட்டம் தும்பல் 110/22 கே.வி துணை மின்நிலையத்தில், நாளை வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, சூலாங்குறிச்சி, தேக்கம்பட்டு, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தெரிச்சூா், நவம்பட்டு, அருணா, வெள்ளக்குறிச்சி, குன்னுாா், கரியகோவில், மண்ணுாா், ஆவரை ஆகிய கிராமங்களுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com