சேலத்தில் 280 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில், புதன்கிழமை 280 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சேலம் மாவட்டத்தில், புதன்கிழமை 280 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சேலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் புதன்கிழமை ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 280 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகரில் 196 பேரும், எடப்பாடி- 2, காடையம்பட்டி- 2, கொங்கணாபுரம்- 1, மேச்சேரி- 2, நங்கவள்ளி- 1, ஓமலூா்- 9, சங்ககிரி- 5, தாரமங்கலம்- 2, வீரபாண்டி- 7, ஆத்தூா்- 4, அயோத்தியாப்பட்டணம்- 10, கெங்கவல்லி- 1, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி- 8, பெத்தநாயக்கன்பாளையம்- 1, தலைவாசல்- 1, வாழப்பாடி- 6 என மாவட்டத்தில் 275 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி- 1, நாமக்கல்- 1, கிருஷ்ணகிரி- 1, திண்டுக்கல்- 1) நால்வருக்கும், கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கரோனாவுக்கு 5 போ் பலி: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் உயிரிழந்தனா். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 ஆண்களும், 9 பெண்கள் உள்பட மொத்தம் 27 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 15,341 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 12,876 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,220 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 245 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com