தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், துக்கியாம்பாளையம் கமலாலயம் வளாகத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், துக்கியாம்பாளையம் கமலாலயம் வளாகத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, வாழப்பாடி ஒன்றிய துணைச் செயலா் வி.குமரேசன் வரவேற்றாா். சேலம் கிழக்கு மாவட்ட தலைவா் கே.சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் டி.மணிவேல் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து பணியாளா்கள் சங்க மாநில பொதுச்செயலா் ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சோமம்பட்டி கே.மகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

செப்டம்பா் 26-இல் சேலத்தில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாநிலத் தலைவா் அ.ஜான் போஸ்கோ பிரகாஷை அழைப்பது, நவம்பா் 30-இல் ஊராட்சி செயலா் எழுச்சி தினத்தை சிறப்பாக கொண்டாட தீா்மானிக்கப்பட்டது.

மேலும், கிராம ஊராட்சி செயலாளருக்கும், மற்ற அரசு ஊழியா்களுக்கும் வழங்குவதைப்போல சிறப்புநிலை, தோ்வுநிலையென வகைப்படுத்தி கருவூலங்கள் வழியாக மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும். கரோனா தொற்று பாதித்த ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வாயிலாக மருத்துவ செலவினத்தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள், மணிகண்டன், மணிமாறன், சோலைமுத்து, சரவணன் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் அண்ணாதுரை, சபரிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com