சேலம் மாவட்டத்தில், வியாழக்கிழமை 291 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
சேலம் மாவட்டத்தில் 15,633 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை ஒரேநாளில் 291 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 165 போ், எடப்பாடி- 2, எடப்பாடி நகராட்சி- 4, காடையம்பட்டி- 5, கொளத்தூா்- 4, கொங்கணாபுரம்- 3, மகுடஞ்சாவடி- 4, மேச்சேரி- 2, மேட்டூா்- 8, நங்கவள்ளி- 6, ஓமலூா்- 4, சங்ககிரி- 7, தாரமங்கலம்- 11, வீரபாண்டி- 9, ஆத்தூா்- 1, ஆத்தூா் நகராட்சி- 3, அயோத்தியாப்பட்டணம்- 5, கெங்கவல்லி- 5, பனமரத்துப்பட்டி- 5, தலைவாசல்- 9, வாழப்பாடி- 2, ஏற்காடு- 3 என மாவட்டத்தில் 275 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் தருமபுரி- 5, ஈரோடு- 1, சென்னை- 5, நாமக்கல்- 1, திருப்பூா்- 2, திருச்சி- 2 என மொத்தம் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3 போ் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் 20 போ், ஆண்கள் 7 போ் என 27 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 15,633 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 13,118 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,267 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 248 போ் உயிரிழந்துள்ளனா்.