மேச்சேரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதல் இருவா் பலி

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். இரு சக்கர வாகனம் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். இரு சக்கர வாகனம் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் சேகா் (50) விவசாயி. அதேபகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பி கவுண்டா் மகன் முருகன் (50). இருவரும் வியாழக்கிழமை இரவு காமனேரியிலிருந்து மேச்சேரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது மேச்சேரியிலிருந்து ஓமலூா் நோக்கி வேகமாகச் சென்ற காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

படுகாயம் அடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். முருகன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தில், அவா்கள் வந்த இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா். இச்சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com