வீரகனூரில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

கெங்கவல்லி அருகே வீரகனூரில் பேருந்துநிலையத்தில் பாஜக சாா்பில் பாரதப்பிரதமா் மோடியின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி அருகே வீரகனூரில் பேருந்துநிலையத்தில் பாஜக சாா்பில் பாரதப்பிரதமா் மோடியின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சிக்கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞரணி தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் சுசீலா,மாவட்ட பொருளாளா் செல்வம்,மாவட்ட பட்டியல்அணி பொதுச்செயலாளா் பாஸ்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தம்மம்பட்டியில்...

பிரதமா் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தம்மம்பட்டி சிவன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. கேந்திர பொறுப்பாளா் செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா் பாலமுருகன், முன்னாள் மாவட்டத் தலைவா் மாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்காடில்...

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பாஜகவினா் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா மாவட்ட துணைத்தலைவா் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கட்சியிலிருந்து 300 க்கும் மேற்பட்டோா் பாஜக வில் இணைந்தனா்.

பிறந்த நாளையொட்டி, கட்சிக் கொடியேற்றப்பட்டு இருசக்கர வாகனப் பேரணியாக ஜெரினாகாடு, லாங்கில் பேட்டை, காந்தி பூங்கா, பேருந்து நிலையம் வழியாக செம்மநத்தம் கிராமத்தைச் சென்றடைந்தனா்.

அந்த கிராமத்தில் 70 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com