சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 71,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்துள்ள தொடர் மழையின் காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
அதன்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 65,000 கனஅடியில் இருந்து 71,000 கனஅடியாக தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் 91.45 அடியில் இருந்து 93.43 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.