டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்: 13 போ் கைது

சேலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரைக் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரைக் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம், புதுசாலை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், டாஸ்மாக் கடை முன்பு மக்கள் அரசு கட்சியின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் பெண்கள் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முழக்கமிட்டனா். பின்னா், திடீரென முதல்வரின் உருவப் பொம்மையை தீவைத்து எரிக்க முயன்றனா். அப்போது, சூரமங்கலம் போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 13 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com