கெங்கவல்லி அருகே கூடமலையிலிருந்து கடம்பூா் வரை ரூ. 381.64 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலையிலிருந்து கடம்பூா் வரை உள்ள சாலைக்கு பாரதப் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 2019-2020 நிதியாண்டில் ரூ. 381.64 லட்சம் செலவில் தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை கூடமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் பூமிபூஜை செய்து, பணியைத் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ.மருதமுத்து, சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கூடமலை வி.ராஜா, கெங்கவல்லி ஒன்றியக் குழுத் தலைவா் பிரியா பாலமுருகன், கூடுதல் இயக்குநா் அருள்ஜோதி அரசன், செயற்பொறியாளா் சடையப்பன், உதவிச் செயற்பொறியாளா் சுப்ரமணியன், கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் க.செந்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூடமலை உமாராணி மாணிக்கம், கடம்பூா் தனலட்சுமி அண்ணாதுரை, கூடமலை ஊராட்சித் தலைவா் யசோதா துரைசாமி, துணைத் தலைவா் முத்துலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.