மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களைக் கண்டித்து, மாதிரி சட்டத் திருத்த மசோதாவை எரித்தும், வயலில் இறங்கியும் சேலம் மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸாா் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
வேளாண் மசோதாவை உடனடியாக திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினா். மாதிரி வேளாண் மசோதாவை கிழித்தும், பதாகைகள் ஏந்தியும் போராட்டம் நடத்தினா். இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சேலம், மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பூபதி, இக்பால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.