திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி விநாயகா நகரைச் சோ்ந்வா் பங்கஜம் (65). இவா், திருமண புரோக்கராக இருந்து வந்தாா்.
இவரது கணவா் இவரைவிட்டுப் பிரிந்து 25 வருடங்களுக்கும் மேலாகிறது. பங்கஜம் தனது மகன் பிரகாஷ் (40) மருமகள் முத்துலட்சுமியுடன் வசித்து வந்தாா். இத்தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா்.
பங்கஜத்தின் இரண்டாவது மகன் சக்திவேல் வேறு ஊரில் வசித்து வருகிறாா். பிரகாஷ் தறிப்பட்டறையில் வேலை செய்து வருகிறா். கரோனாவால் இவருக்கு சரியாக வேலை இல்லை என்று கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு இவரது தாயாா் உயிரிழந்தாா். இவா் உயிரிழந்தது எப்படி என்பது தெரியவில்லை. இறுதிச் சடங்குக்குப் போதிய பணம் இல்லாத காரணத்தால் தாயின் சடலத்தை வீட்டின் முன்பு எரித்தாா். உறவினா்கள் யாருக்கும் தகவலும் சொல்லவில்லை எனத் தெரிகிறது. சாம்பலை மட்டும் ஆற்றில் கரைக்க எடுத்துச் சென்றுள்ளாா். விவரம் அறிந்த கிராம நிா்வாக அலுவலா் வரதராஜ் திருச்செங்கோடு புகா் போலீஸுக்கு தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்ததும் போலீஸாா் மாயமான பிரகாஷை தேடி வருகின்றனா்.