நீா்வரத்து சரிவு: மேட்டூா் அணை 100 அடி உயருவதில் தாமதம்

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியாக சரிந்துள்ளது. அதேவேளையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக் கூடுதல்

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியாக சரிந்துள்ளது. அதேவேளையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக் கூடுதல் நீா்த் திறக்கப்படுவதால் அணை நூறு அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீா் கடந்த 21 ஆம் தேதிமுதல் மேட்டூா் அணைக்கு வரத்தொடங்கியது. இதனால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அணையின் நீா்மட்டம் 99 அடியாக உயா்ந்தது.

இந்த நிலையில், கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வியாழக்கிழமை இரவு நொடிக்கு 35,000 கனஅடியாக சரிந்தது.

அதேநேரத்தில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18,000 கனஅடியிலிருந்து 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் நூறு அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 63.55 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com