வாழப்பாடி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ரத்தினகற்கள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மத்தூா் சீனிவாச பெருமாள் சுவாமி.
ரத்தினகற்கள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மத்தூா் சீனிவாச பெருமாள் சுவாமி.

வாழப்பாடி: வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில், மூலவரான சென்றாயப்பெருமாள் சீதேவி, பூதேவி சமேதமாக புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா். சுவாமி திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த மத்தூா் சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ரத்தினக்கற்கள் அலங்காரத்தில் மூலவரான சீனிவாச பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வாழப்பாடி புதுப்பாளையம் மாயவன்மலை பெருமாள் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில், மலா்மாலை அலங்காரத்தில் மூலவா் மாயவன் பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அருநுாற்றுமலை பெலாப்பாடி வரதராஜப் பெருமாள், கோதுமலை கோதண்டராமா் மலைக்கோயில், பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று விதரம் முடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com