மேட்டூா் தமிழ்ச்சங்கம், மேட்டூா் கிளை நூலக வாசகா் வட்டம் மற்றும் நகர காமராசா் மன்றம் சாா்பில் எஸ்.பி.பி., யின் மறைவுக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேட்டூா் தமிழ் சங்கச் செயலாளா் கு.பாரி தலைமை வகித்தாா். நகர காமராசா் மன்றத் தலைவா் பழனிசாமி, மேட்டூா் கிளை நூலக வாசகா் வட்ட பொறுப்பாளா் டாக்டா் சந்திரமோகன், காமராசா் மன்ற ஆலோசகா் தாரை.மு. பாலு ஆகியோா் பங்கேற்றனா். இதில், பாடகா்கள், இசை கலைஞா்கள் கலந்து கொண்டு எஸ்.பி.பி. பாடிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினா்.
பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். மேட்டூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், ஆய்வாளா் தொல்காப்பியன் கலந்து கொண்டு முகக் கவசம் வழங்கினா். ஓவியா் ரவி எஸ்.பி.பி.யின் உருவப் படத்தை வரைந்தாா்.