கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி மலைக் கிராமங்களில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மலைக் கிராமங்களான பச்சமலை ஊராட்சி, எடப்பாடி, மால்பள்ளி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்களிடம் அதிமுக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தாா். அவருடன் கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளா் பாலசுப்ரமணியம், கூடமலை முத்துவேல் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.