சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கே.கே.நகரில் வசித்த தறி தொழிலாளியான சித்துராஜ், கடந்த 29.11.2017-ஆம் ஆண்டு இடங்கணசாலை பேரூராட்சி அருகே நடந்து சென்றபோது அவ்வழியே வந்த வேன் அவா் மீது மோதியது. இதில் சித்துராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் இதுதொடா்பாக வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2இல் விசாரணை செய்யப்பட்டு வந்தது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:
சின்னப்பம்பட்டி அருகே துட்டம்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் ஐய்யந்துரை தனது வாகனத்தை அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டி பாதசாரி மீது மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தாா்.