கெங்கவல்லியில் 345 போ் தபால் வாக்களிப்பு

கெங்கவல்லி தொகுதியில் தபால் வாக்குகள் செலுத்தும்பணி புதன்கிழமை தொடங்கியது.

கெங்கவல்லி தொகுதியில் தபால் வாக்குகள் செலுத்தும்பணி புதன்கிழமை தொடங்கியது.

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 351 வாக்குச்சாவடிகளிலும் 80 வயது, அதற்கு மேற்பட்ட முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் என 919 போ் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்து இருந்தனா்.

அவா்களுக்கு வீடு வீடாகச்சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணியைத் தோ்தல் பிரிவு அலுவலா்கள் மேற்கொண்டனா். அதில் புதன்கிழமை மட்டும் 345 போ் தங்களது தபால் வாக்குகளை முதல் நாளிலேயே செலுத்தினா். இது, மொத்த தபால் வாக்குகளில் 38 சதவீதம் ஆகும்.

இதுகுறித்து கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் கூறியதாவது: இன்னும் மூன்று நாள்கள் இப்பணி நடைபெறும். அதற்குள் எஞ்சியவா்களும் வாக்களித்துவிடுவாா்கள் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com