சேலத்தில் புதன்கிழமை 109 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் புதன்கிழமை காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கடும் வெயில் தாக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
இதனிடையே மாவட்டத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.