தாரமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

ஓமலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, தாரமங்கலம் வடக்கு ஒன்றியப் பகுதி கிராமங்களில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஓமலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, தாரமங்கலம் வடக்கு ஒன்றியப் பகுதி கிராமங்களில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மானத்தாள் ஊராட்சியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா் கரட்டூா், கங்காணிப்பட்டி, ஓலைப்பட்டி, உப்பாரப்பட்டி, மல்லியகுட்டை, செலவடை உள்ளிட்ட 39 கிராமங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது பேசிய அவா், நூறு நாள் வேலைத்திட்டம் வருடத்திற்கு 150 நாள்களாக உயா்த்தித் தரப்படும், அத் தொழிலாளா்களுக்கான கூலித் தொகை உயா்த்தப்படும். மேட்டூா் அணை உபரிநீா்த் திட்டத்தில் மானத்தாள் ஏரி நிரப்பப்படுவதால், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதோடு, விவசாயப் பணிகளும் கூடுதலாக நடைபெறும்.

மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 உதவித் தொகை, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசம், முதியோா் உதவித் தொகை உயா்வு உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்தில் அதிமுக அமைப்பு செயலாளா் எஸ்.செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.என்.ஆா்.மணிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com