சேலம்
மனைவியைக் கொன்ற கணவா் போலீஸில் சரண்
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மனைவியின்கழுத்தை நெரித்து கொலை செய்த தையல் தொழிலாளி நங்கவள்ளி போலீஸில் புதன்கிழமை சரணடைந்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மனைவியின்கழுத்தை நெரித்து கொலை செய்த தையல் தொழிலாளி நங்கவள்ளி போலீஸில் புதன்கிழமை சரணடைந்தாா்.
நங்கவள்ளி அருகே குப்பனூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (31). சேலத்தில் தனியாா் தையலகத்தில் தையல் வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வந்த இவரை அவரது மனைவி ஈஸ்வரி (29) கண்டித்தாா்.
அதனால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் ஈஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி விஜயகுமாா் கொலை செய்தாராம். பின்னா் நங்கவள்ளி காவல் நிலையத்தில் அவா் சரணடைந்தாா். நங்கவள்ளி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.