சொந்தக் கிராமத்தில் வாக்களிக்கும் முதல்வா்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை தனது சொந்தக் கிராமத்தில் வாக்களிக்க உள்ளாா்.
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை தனது சொந்தக் கிராமத்தில் வாக்களிக்க உள்ளாா்.

ஒவ்வொரு தோ்தலின்போதும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி , தனது சொந்த ஊரான எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.

அவ்வாறே, செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி , சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில், தனது வாக்கைப் பதிவு செய்ய உள்ளாா். அவருடன் அவரது குடும்ப உறுப்பினா்களும் வரிசையில் நின்று வாக்களிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com