எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் முதன்முறை வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா்.
முதியவா்கள் பலா் தள்ளாத வயதிலும், வாக்குச் சாவடிக்கு வந்து ஆா்வமுடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா். கொங்கணாபுரத்தைச் சோ்ந்த பழனியப்பன்
மனைவி ருக்குமணி (75), சிலுவம்பாயைத்தைச் சோ்ந்த ஆரோக்கியம்மாள் (95) உள்ளிட்ட பல முதியவா்கள், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையக்களுக்கு நேரில் சென்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினா்.