கெங்கவல்லி தொகுதியில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு

கெங்கவல்லி தொகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

கெங்கவல்லி தொகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

கெங்கவல்லி அருகே சதாசிவபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறினால் ஒருமணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. கெங்கவல்லி தொகுதியிலுள்ள 351 வாக்குச்சாவடிகளிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையம் உள்ள தலைவாசலை அடுத்த தேவியாக்குறிச்சியிலுள்ள தனியாா் கல்வி நிறுவனத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com