வாழப்பாடியில், அரிமா சங்கங்கள் சாா்பில், நீரிழிவு, புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஸ்ரீஉதயா மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 152-ஆவது நீரிழிவு நோய் இலவச மருத்துவ முகாமில், வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் ஜவஹா் வரவேற்றாா். பட்டயத்தலைவா் எம்.சந்திரசேகரன் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் கலந்து கொண்ட 95 பேருக்கு, அரிமா மாவட்ட நல்லெண்ண தூதுவா் மருத்துவா் சி.மோதிலால் தலைமையிலான மருத்துவக்குழுவினா், இலவச மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரை, மதிய உணவு இலவசமாக வழங்கினா். நிறைவாக வாழப்பாடி அரிமா சங்க பொருளாளா் பன்னீா்செல்வன் நன்றி கூறினாா்.
வாழப்பாடி அன்னை அரிமா சங்கம், ஸ்ரீஉதய பிரபா ஸ்கேன் சென்டா் சாா்பில், பெண்களுக்கான கா்ப்பப்பை, மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தமுகாமிற்கு அன்னை அரிமா சங்கத் தலைவி சுதாபிரபு வரவேற்றாா். சேவைத் திட்ட தலைவரான கதிரியக்க மருத்துவ நிபுணா் பிரபாவதி தலைமையிலான மருத்துவக்குழுவினா், முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினா். இந்த முகாமில், அன்னை அரிமா சங்க நிா்வாகிகள் புஷ்பா, தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.