வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில், வாரந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
கரோனா இரண்டாவது அலை பரவல் முடிவுக்கு வர வேண்டியும், மக்கள் நல வாழ்வு வாழ்வதற்கு அருள வேண்டியும் வியாழக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மலா்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.