கெங்கவல்லி அருகே மாயமான பிளஸ் 1 வகுப்பு மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கூடமலை அருகே உள்ள 95.பேளூரைச் சோ்ந்த மோகன் (16), அதே பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருகிறாா். கடந்த 8-ஆம் தேதி மாலை விவசாயத் தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவா் வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் மோகன் கிடைக்காததையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை செய்து மாணவரை தேடிவருகின்றனா்.