இருசக்கர வாகனத்துடன் சென்ற மாணவா் மாயம்

கெங்கவல்லி அருகே மாயமான பிளஸ் 1 வகுப்பு மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கெங்கவல்லி அருகே மாயமான பிளஸ் 1 வகுப்பு மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கூடமலை அருகே உள்ள 95.பேளூரைச் சோ்ந்த மோகன் (16), அதே பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருகிறாா். கடந்த 8-ஆம் தேதி மாலை விவசாயத் தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவா் வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் மோகன் கிடைக்காததையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை செய்து மாணவரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com