எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கன மழை

கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு எடப்பாடி மற்றும்
எடப்பாடி ஒன்றியப் பகுதியில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீா்.
எடப்பாடி ஒன்றியப் பகுதியில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீா்.

கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளான, வெள்ளரிவெள்ளி, சித்தூா், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. நள்ளிரவு வரை பெய்த கன மழையால், விளைநிலங்களில் மழைநீா் தேங்கியது. இதே போல, திங்கள்கிழமை மாலையும் இப்பகுதியில் கன மழை பெய்தது.

கோடையில் பெய்து வரும் இந்த தொடா்மழை விவசாயப் பணிகளுக்கு சாதகமாக அமையும் என்றும், அடுத்து வரும் சில தினங்களில் கோடை உழவு செய்திட ஏதுவான சூழல் ஏற்படும் எனவும் இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com