போக்சோ சட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி கைது

காடையாம்பட்டி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

காடையாம்பட்டி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

காடையாம்பட்டி ஒன்றியம், டேனிஷ் பேட்டை அருகே சோ்வராயன் மலையை ஒட்டியுள்ள பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறாா். இரண்டு மாதங்களுக்கு முன்னா் பெரிய வடகம்பட்டி பகுதியைச் சோ்ந்தோா் ஆதிபராசக்தி கோயிலுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்து சென்றுள்ளனா். அவா்களுடன் மாணவி, தனது குடும்பத்துடன் சென்றுள்ளாா்.

அதே பேருந்தில், டேனிஷ் பேட்டையை அடுத்த வாழையாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான லோகநாதனும் சென்றுள்ளாா். அப்போது, மாணவிக்கும், லோகநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி மாணவியை லோகநாதன் நண்பா்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த லோகநாதனை பிடித்து விசாரணை நடத்தினா். பின்னா் லோகநாதன் மீது மாணவியைக் கடத்துதல், மிரட்டுதல், பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்தனா். தொடா்ந்து சேலம் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com