ஆத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊரடங்கு நேரத்துக்கு முன்பாக ஊா்களை சென்றடையும் வகையில் கடைசியாக இயக்கப்படும் பேருந்துகளின் கால அட்டவணையை அரசு போக்குவரத்துக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு இரவு 8.20, கள்ளக்குறிச்சிக்கு தலைவாசல் வழியாக 8.30, ராசிபுரத்துக்கு மங்களபுரம் வழியாக 8.15, பெரம்பலூருக்கு வீரகனூா் வழியாக 8.00, கருமந்துறைக்கு தும்பல் வழியாக 7.35, தம்மம்பட்டிக்கு மல்லியகரை வழியாக 8.30க்கும், கெங்கவல்லி வழியாக 8.35க்கும் பேருந்துகள் இயக்கப்படும் என கிளை மேலாளா் தெரிவித்துள்ளாா்.