தம்மம்பட்டியில் கபசுரக் குடிநீா் விநியோகம்

தம்மம்பட்டி பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கபசுரக் குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கபசுரக் குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி உத்தரவின்பேரில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் பேருந்து நிலையம், உழவா்சந்தை, 8 ஆவது வாா்டு, காவல் நிலையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தினமும் 50 லிட்டா் கபசுரக்குடிநீா் பொதுமக்களுக்கு காலை 7 மணி முதல் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பேரூராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்வது வரவேற்கக்கூடியது. இதன் அளவை இன்னும் அதிகப்படுத்தி, வாா்டு வாரியாக வீடுவீடாக விநியோகிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுத்தால் கரோனா தொற்று பரவாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com