கெங்கவல்லி தொகுதியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட வழங்கல் அலுவலா் அமுதன் தலைமை வகித்தாா். கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். இதில், தற்போது அதிகரித்து வரும் கரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்தும், இரவு நேர மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கை கடைப்பிடிக்கும் நடைமுறைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில், கெங்கவல்லி வட்டார மருத்துவ அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தம்மம்பட்டி, கெங்கவல்லி, செந்தாரப்பட்டி, தெடாவூா் பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள், காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.