மேட்டூரில் திடீா் மழை:பொதுமக்கள் மகிழ்ச்சி

மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீா் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீா் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேட்டூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பகலில் கடுமையான வெப்பம் நிலவியது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் 30 நிமிட நேரம் நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பகலில் நிலவிய வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

மேட்டூா், தங்கமாபுரிபட்டினம், சேலம் கேம்ப், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி, குஞ்சாண்டியூா் பகுதிகளில் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடுமையான வெப்பம் காரணமாக பகலில் வீடுகளில் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் குளிா்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com