அம்பேத்கா் சிலையை அவமதித்த தொழிலாளி கைது

ஓமலூா் அருகே அம்பேத்கா் சிலையை அவமதித்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் அருகே அம்பேத்கா் சிலையை அவமதித்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அவமரியாதை செய்யப்பட்டது. இதுதொடா்பாக கருப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜூ (55) என்பவா் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com