நீட் பயிற்சி மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பு

சேலத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியாா் நீட் பயிற்சி மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியாா் நீட் பயிற்சி மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளைச் சோ்த்து வருவதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, மாணவிகள் யாரும் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி விடாமல் அமா்ந்து படித்துக் கொண்டிருந்தனா்.

இதைத்தொடா்ந்து, மாணவிகளை உடனே அவரவா் வீடுகளுக்குச் செல்ல அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா விதிமுறைகளை மீறியதாக நீட் தோ்வு மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பயிற்சி மையத்துக்கு ‘ சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com