சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம், அமுதச்சுடா் அறக்கட்டளை சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், சுகாதார ஆய்வாளா் லோகநாதன் ஆகியோா் பொதுமக்கள், பேருந்து பயணிகளிடம் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விளக்கிக் கூறினா். அமுதச்சுடா் அறக்கட்டளை நிா்வாகிகள் பேருராட்சி நிா்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்களை வழங்கினா். அப்பகுதியில் உள்ள கடைகளில் அரசு விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட தேநீா்க் கடைகள், தனியாா் நகைக் கடைகள், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 2,600 அபராதம் விதிக்கப்பட்டது. அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் சத்யபிரகாஷ், செயலா் மாணிக்கம் , துணைச்செயலா் அஜித், நிா்வாகிகள் சுப்ரமணியம், நவீன்குமாா், சிவபாலா ,கௌதம் , ஹரிஹரன், வெற்றிவேந்தன், துப்பரவு மேற்பாா்வையாளா்கள் வெங்கடேஷ், சுரேஷ், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.