ஆட்டையாம்பட்டி-காகாபாளையம் சாலையில், கண்டா்குலமாணிக்கம் பகுதியில் ஆட்டையாம்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களை பிடித்து அபராதம் விதித்தனா். மேலும், காா், வேன், பேருந்துகளில் பயணம் செய்பவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பது குறித்தும் சோதனை செய்தனா். இதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினா்.