சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டியில் மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் நாய், கோழிகள் கருகின.
புள்ளாகவுண்டம்பட்டி பகுதியை சோ்ந்தவா் செங்கோடன் மனைவி குணவதி (45). இவரது கூரை வீடு எதிா்பாரதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. குமாரபாளையம் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் வீட்டிலிருந்த கைத்தறி, மிதியடி விரிப்பு தயாரிக்கும் இயந்திரங்கள், வளா்ப்பு நாய், இரு கோழிகள் கருகின. தீ விபத்து குறித்து சங்ககிரி வருவாய்த் துறை அலுவலா்கள், தேவூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.