சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த காவலா்களைக் கண்டித்து விளம்பர பேனரில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (25). இவா் திங்கள்கிழமை இரவு கோரிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்ட கன்னங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்தி உள்ளிட்ட காவலா்கள் சரவணனை நிறுத்தி உரிய ஆவணம் உள்ளதா எனக் கேட்டனா். அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவலா்கள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு இருசக்கர வாகனத்தை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்துக்கு வந்த சரவணன், அங்குள்ள 100 அடி உயர விளம்பர பேனரில் ஏறி காவல் துறையினரைக் கண்டித்து தற்கொலை மிரட்டல் விடுத்தாா். தகவலறிந்த போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையாளா் வேதரத்தினம் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருசக்கர வாகனத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
இதையடுத்து கீழே இறங்கி வந்த சரவணனை, காவலா்கள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா். பின்னா் அவரிடம் இருசக்கர வாகனத்தை ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியது:
வாகனச் சோதனையின்போது சரவணன், தான் ஒரு வழக்குரைஞா் என்று கூறினாா். பின்னா் அவா் சட்டம் படித்து வருவதாக முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாா். அதனால் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தோம் என்றனா்.